| ஆசிரியப்பாவினம் |
|
|
ஆசிரியப்பாவினம்ஆசிரியத் தாழிசைவானுற நிமிர்ந்தனை வையகம் அளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயிர் ஓம்பினை நீனிற வண்ணநின் நிரைகழல் தொழுதனம்
ஆசிரியத் துறைஇரங்கு குயில்முழவா இன்னிசையாழ் தேனா அரங்கு மணிபொழிலா ஆடும் போலும் இளவேனில் அரங்கு மணிபொழிலா ஆடு மாயின் மரங்கொல் மணந்தகன்றார் நெஞ்சமென் செய்ததிளவேனில்
ஆசிரிய விருத்தம்அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்தொழும்அடியர் இதயமலர் ஒருபொழுதும் பிரிவரிய துணைவர் எனலாம் எழும்இரவி கிரணநிகர் இலகுதுகில் புனைசெய்தருள் இறைவர் இடமாம் குழுவுமறை யவருமுனி வரருமரி பிரமருர கவனும் எவரும் தொழுகைய இமையவரும் அறம்மருவு துதிசெய்தெழு துடித புரமே!
எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்தோடார் இலங்கு மலர்கோதி வண்டு வரிபாட நீடு துணர்சேர் வாடாத போதி நெறிநீழல் மேய வரதன் பயந்த அறநூல் கோடாத சீல விதமேவி வாய்மை குணனாக நாளும் முயல்வார் வீடாத இன்ப நெறிசேர்வர்! துன்ப வினைசேர்தல் நாளும் இலரே
எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்எண்டிசையும் ஆகி இருள்அகல நூறி எழுதளிர்கள் சோதி முழுதுலகம் நாறி வண்டிசைகள் பாடி மதுமலர்கள் வேய்ந்து மழைமருவு போதி உழைநிழல்கொள் வாமன் வெண்டிரையின் மீது விரிகதிர்கள் காண வெறிதழல்கொள் மேனி அறிவனெழில் மேவு புண்டரிக பாதம் நமசரனம் ஆகும் எனமுனிவர் தீமை புணர்பிறவி காணார் |

