Virtual Vinodh

கலிப்பாவினம் Print E-mail

கலிப்பாவினம்

கலித்தாழிசை

வாள்வரி வேங்கை வழங்கும் சிறுநெறிஎம்

கேள்வரும் போழ்தில் எழால்வாழி வெண்திங்காள்

கேள்வரும் போழ்தில் எழாலாய்க் குறாலியரோ

நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்திங்காள்

 

கலித்துறை

ஆவி அந்துகில் புனைவதொன் றன்றிவே றறியாள்

தூவி அன்னமென் புனலிடைத் தோய்கிலா மெய்யாள்

தேவு தெண்கடல் அமிழ்துகொண் டனங்கவேள் செய்த

ஓவி யம்புகை யுண்டதே ஒக்கின்ற உருவாள்

 

கட்டளை கலித்துறை

தனந்தரும் கல்வி தருமொரு நாளும் தளர்வறியா

மனந்தரும் தெய்வ வடிவும் தரும்நெஞ்சில் வஞ்சமில்லா

இனந்தரும் நல்லன எல்லாம் தருமன்பர் என்பவர்க்கே

கனந்தரும் பூங்குழ லாளபி ராமி கடைக்கண்களே

 

கலிவிருத்தம்

பேணநோற் றதுமனைப் பிறவி பெண்மைபோல்

நாணநோற் றுயர்ந்தது நங்கை தோன்றலான்

மாணநோற் றீண்டிவள் இருந்த வாறெலாம்

காணநோற் றிலனவன் கமலக் கண்களால்