Virtual Vinodh

வெண்பாவினம் Print E-mail

வெண்பாவினம்

குறள் வெண்பா

குறள் வெண்செந்துறை

போதிநிழற் புனிதன் பொலங்கழல்

ஆதி உலகிற் காண்

 

குறட்டாழிசை

நண்ணு வார்வினை நைய நாடொறும் நற்ற வர்க்கர சாய ஞானநல்

கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே

 

வெண்டாழிசை

 

நண்பி தென்று தீய சொல்லார்

முன்பு நின்று முனிவு செய்யார்

அன்பு வேண்டு பவர்

 

வெண்டுறை

படர்தருவெவ் வினைத்தொடர்பாற் பவத்தொடர்பப் பவதொடர்பாற் படராநிற்கும்

விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக் கொழிபுண்டோ வினையேற்கம்மா

விடர்பெரிது முடையேன்மற் றென்செய்கே னென்செய்கே

னடலரவ மரைக்கசைத்த வடிகேளோ வடிகேளோ

 

வெளிவிருத்தம்

மருள்அறுத்த பெரும்போதி மாதவரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்!

அருள்இருந்த திருமொழியால் அறவழக்கங் கேட்டிலனால்! - என்செய்கோயான்!

பொருள்அறியும் அருந்தவத்துப் புரவலரைக் கண்டிலனால்! - என்செய்கோயான்!